மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு மக்கள் இடம்பெயர்வு
இம்பால், ஜூன் 19 - மணிப்பூர் பெரும்பான்மை வாக்கு களைப் பெறுவதற்காக, பாஜக மூட்டி விட்ட கலவரத் தீ, 45 நாட்களுக்கும் மேலாக அணையாமல் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. மெய்டெய் - குக்கி என இரண்டு தரப்பிலும் வன்முறையால் பாதிக்கப் பட்ட மக்கள் சுமார் 1 லட்சம் பேர் தங்களின் இருப்பிடங்களை இழந்து, சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகி யுள்ளனர். இவர்களில் சுமார் 50 ஆயி ரம் பேர், மிசோரம், நாகாலாந்து மாநி லங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் அரசு முகாம்களிலும், ஆயிரக்கணக்கானோர் காடுகளில் உயிர்தப்பி பதுங்கி உள்ளனர். சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம், போலீஸ் என 50 ஆயிரம் பேரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி யிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினாலும், வன்முறை கட்டுக்குள் வந்தபாடாக இல்லை. மே 3-ஆம் தேதி துவங்கிய வன்முறை இப்போதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மெய்டெய் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் குக்கி ஆயுதமேந்திய குழுக்களும், குக்கி பகுதிகளுக்குள் மெய்டெய் ஆயுதமேந்திய குழுக்களும் நள்ளிரவில் புகுந்து கண்ணில் தென்படு பவர்களை எல்லாம் வெட்டிச் சாய்ப்பதும், துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்வதும் நீடித்து வருகிறது. தற்போது, வீதிகள், தெருக்களைக் கைப்பற்றி, தத்தமது சமூகத்தின் பெயர்களைச் சூட்டும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
அடையாள அழிப்பில் மெய்டெய் - குக்கி குழுக்கள்
தலைநகர் இம்பாலில் உள்ள இவாஞ்சலிக் பப்டிஸ்ட் கன்வென்ஷன் சர்ச் தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன், சர்ச்சில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ‘பைதே வெங்’ (குக்கி காலனி) என எழுதப்பட்டுள்ளது. இங்கி ருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியின் நுழை வாயிலில் ஒரு வாரத்துக்கு முன்பு, மெய்டெய் இளவரசரின் குடியிருப்பு என எழுதப்பட்டது. மேலும், குக்கி மற்றும் மெய்டெய் சமுதாயத்தினர் சம அள வில் வசிக்கும் இந்த குடியிருப்பு பகுதி யில் கடந்த மாதம் நடந்த வன்முறை யின்போது, குக்கி சமுதாயத்தினரின் வீடுகள் அதிக அளவில் தாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகரிலிருந்து 70 கி.மீ. தொலை வில் உள்ள சூரசந்த்பூரில் குக்கி சமு தாயத்தினர் அதிக அளவில் வசிக்கின்ற னர். அங்கிருந்த மெய்டெய் இனத்தவர் களின் வீடுகள் தாக்குதலுக்கு உள்ளா யின. ‘சூரசந்த்பூர்’ என மெய்டெய் அடையாளம் கொண்ட பெயர்ப்பலகை கள் மீது, ‘லம்கா’ என குக்கி அடை யாளத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் ஒட்டப் பட்டுள்ளன. இதுபோல இம்பால் நகரின் கிழக்கில் உள்ள செக்கான் பகுதியில் குக்கி சமுதாயத்தினரின் சொத்துகள் மீது கடந்த 2 நாட்களாக தாக்குதல் நடத்தப் பட்டன. அந்த குடியிருப்பு பகுதியின் பெயர்ப் பலகைகள் கறுப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளன.
குக்கிகளை வந்தேறிகள் எனும் மெய்டெய் மக்கள்
மணிப்பூர் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை கொண்டுவர வேண்டும்; மியான்மரில் இருந்து வந்து மணிப்பூரில் குடியேறிய ‘குக்கி சின்’ வந்தேறிகளை வெளி யேற்ற வேண்டும் என ‘மெய்டெய்’ பிரிவினர் புதிய கோஷத்தை கையில் எடுத்துள்ளனர். இந்த கோஷத்தை எழுப்பிய படியும், கைகளில் தீப்பந்தம் ஏந்திய படியும் மெய்டெய் சமூகப் பெண் ஊர்வலம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
குறிவைத்துத் தாக்கப்படும் தேவாலயங்கள்
வன்முறை வெடித்ததில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் கீழுள்ள 10 நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளதாக இம்பால் பேராயர் டொமினிக் லுமன் வேதனை தெரிவித்துள்ளார். 36 மணி நேரத்திற்குள் மெய்டெய் கிறிஸ்த வர்களுக்குச் சொந்தமான 249 தேவா லயங்கள் தீ வைக்கப்பட்டதாக கூறி யிருக்கும் அவர், மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரே, மெய்டெய் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், மற்றவர்கள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என் றால், மெய்டெய் மக்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிக்குள் எப்படி அவர் களால் வரமுடிந்தது; தேவாலயங்கள் இருக்கும் இடங்கள் எல்லாம் அவ் வளவு துல்லியமாக எப்படி தெரி யும்? என்றும் கேள்விகளை முன் வைத்துள்ளார். இது திட்டமிட்ட தாக்குதலா கவே தெரிகிறது என்று கூறியி ருக்கும் பேராயர், சிறுபான்மையி னரை திட்டமிட்டு மவுனிக்கச் செய் வது இன்னொரு ‘கர் வாப்சி’ இல்லையா?; மேலும், தேர்ந்தெ டுக்கப்பட்ட மாநில மற்றும் ஒன்றிய அரசால் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகும் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க முடிய வில்லை. வெறித்தனமான வன் முறையை நிறுத்த முடியவில்லை என்றால், மாநிலத்தில் அரசியல மைப்பு இயந்திரம் சீர்குலைந் துள்ளது என்று கூறுவதுதானே பொருத்தமானது. ஏன் இன்னும் குடியரசுத் தலைவர் ஆட்சியை இங்கு அமல்படுத்தவில்லை? என் றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் பாசாங்கு
மணிப்பூரில் வன்முறை நீடிப்ப தற்கு காரணமே, பாஜக ஆதரவு மத வெறிக் குழுக்கள்தான் ஊடுருவல் தான் என்று குக்கி பழங்குடி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், வன்முறைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போல, ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலேவும் போலிக் கண்ணீர் வடித்துள்ளார். “மணிப்பூரில் அகதிகளாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தி யாவசியப் பொருட்களை வழங்கி உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,. ஜனநாயக நாட்டில் வெறுப்பு, வன்முறைக்கு இடமே இல்லை. வெறுப்பும் வன்முறையும்தான் இப்போதைய மணிப்பூர் வன் முறைக்கு காரணம். இந்த வன் முறை சம்பவங்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார்.
ஒன்றரை மாதமாக வாய்திறக்காத மோடி'
மாநில ஆளுநர் தலைமையில் அமைதிக்குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக ஒன்றிய பாஜக அரசு கூறினாலும், இப்போதுவரை அந்த அமைதிக்குழு செயல்படவில்லை. 4 நாள் முகாமிட்டதோடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சா ரத்திற்குச் சென்று விட்டார். பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றரை மாதம் ஆகியும் மணிப்பூர் வன்முறை பற்றி இதுவரை வாய் திறக்காமல், வன்முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார்.
வானொலிப் பெட்டிகளை கீழேபோட்டு உடைத்த மக்கள்
ஞாயிறன்று பிரதமர் மோடி தனது 102-ஆவது ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, 1975 எமர்ஜென்சி குறித்தும், தற் போதைய பிபர்ஜாய் புயலை எதிர் கொண்டது குறித்தும் பேசி னாரே தவிர, அப்போதும் மணிப்பூர் வன்முறை குறித்து எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்க வில்லை. இதனால், மணிப்பூரின் சாமுரூ கெய்தெலில் நூற்றுக்கணக் கான மக்கள் தங்கள் வானொலி பெட்டிகளை உடைத்து பிரதமர் மோடிக்கு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது, “மன் கி பாத் சோரோ, கம் கி பாத் கரோ” (“மன் கி பாத் தீர்வு அல்ல, அமைதிக் கொண்டு வாருங்கள்”) என்று முழக்கங்களை எழுப்பினர்.
ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்படவில்லை
“மாநிலத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு செயல்படவில்லை” என்று அறிக்கை ஒன்றில் குற்றம் சாட்டி யிருக்கும், அனைத்து சாமுரோ யுனைடெட் கிளப்ஸ் அமைப்பு (ASUCO), “மணிப்பூரில் மத்திய பாதுகாப்புப் படைகள் அமைச்சர் கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடு களுக்குப் பாதுகாப்பு அளிக்கவா வந்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், “மணிப்பூ ரில் இருந்து மத்திய பாதுகாப்புப் படைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமே!” என்று கூறியிருக் கும் சாமுரோ அமைப்பு, “பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற மத்திய தலை வர்களுக்கு. பதவியேற்பு விழாக் களில் கலந்துகொள்வதுதான் மிக வும் முக்கியமானதாகத் தோன்று கிறது போலும்” என்றும் சாடியுள் ளது. “10 குக்கி - சின் எம்எல்ஏக்கள் மணிப்பூரின் பிராந்திய ஒருமைப் பாட்டுக்கு வெளிப்படையாக அச்சு றுத்தல் விடுத்தபோது, அந்த 10 எம்எல்ஏ-க்கள் மீது பாஜக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?” என்ற கேள்வியை முன்வைத்துள் ளது.
அமித்ஷாவுக்கு உள்துறை எதற்கு?
இதனிடையே, மணிப்பூர் விவகாரத்தில் பாஜக மூத்த தலை வர் சுப்பிரமணியசாமியும் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார். “பாஜக மணிப்பூர் அரசைப் பதவி நீக்கம் செய்து, அரசியலமைப்பின் 356- ஆவது பிரிவின் கீழ் ஒன்றிய ஆட்சி யைத் திணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அமித்ஷாவை விளை யாட்டு அமைச்சகத்துக்கு அனுப் புங்கள். அவர் தனது மகனை பிசிசிஐ -யில் பாதுகாப்பதில் ஆர்வமாக உள்ளார்” என டுவிட்டரில் சுப்பிர மணியசாமி பதிவிட்டுள்ளார். மணிப்பூர் வன்முறைக்கு ஆளும் பாஜக-வே காரணம் என்ற வலுவான கருத்து உள்ளதால், மணிப்பூர் மக்கள், அங்குள்ள ஒன்றிய பாஜக அமைச்சர்கள், மாநில பாஜக அமைச்சர்கள், சட்ட உறுப்பினர்களின் வீடுகளை மட்டு மன்றி, பாஜக அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சூறையாடி வரு கின்றனர் என்பது குறிப்பிடத்தக் கது.